Tuesday, November 17, 2009

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)

1. அல்லேலுயா துதி மகிமை - என்றும்
அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா! எங்கள் ராஜா !
என்றென்றும் போற்றிடுவோம் .- ஓசன்னா

2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை! கலக்கம் இல்லை !
கர்த்தர் நம்முடனே -ஓசன்னா

3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமும் இலை! கலக்கம் இல்லை!
மீட்பர் நம்முடனே - ஓசன்னா

4. பாதாளம் வாய் திறந்தாலும்
மரணமே எதிர் வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை !
இயேசு நம்முடனே - ஓசன்னா

எழுதியவர்
சாம் ஜெபத்துரை

இயேசு ராஜனின் திருவடிக்கு புத்தெழுச்சி பாடல்கள்

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!
ஆத்மா நாதரின் மலரடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!

சரணங்கள்
பார் போற்றும் தூய தூய தேவனே,
மெய் ராஜாவே எங்கள் நாதனே ,
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே
சாரணம்! சரணம்! சரணம் !- இயேசு ராஜனின்

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே,
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே ;
சரணம்!சரணம்! சரணம்!

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே,
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே i
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன் ;
சரணம்! சரணம்! சரணம்!

எழுதியவர்
திரு. A.RJ. சத்யா

Saturday, November 14, 2009

சேனைகளின் கர்த்தரே கீர்த்தனை 238

பல்லவி

சேனைகளின் கர்த்தரே ! நின்
திருவிலம் அளவற இனிதினிதே!

அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத .-

சரணங்கள்

திருவருளிலமே , கணுறும் உணரும்
தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய .- சேனை

புவியோர் பதிவான் புகநிதியே !
புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் !

பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவேனே; எனச்சொலி
பேனிடத்துணை ஈவையே !
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர் தரும் .- சேனை

ஆலய மது நிறைவாக ,
அவைக் குறை வொழிநதேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ,
ஆலய பர னேச
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது?

Monday, November 9, 2009

பாதைக்கு தீபமாமே கீர்த்தனை 213

பல்லவி

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம் -மா நல்ல



சரணங்கள்

பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே ,
பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.-மா நல்ல



தேனின் மதுரமே , திவ்ய அமுதமே ,
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்- மா நல்ல

நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே,
ஓதரும் மேன்மையாமே பரிசுத்த ஆகமம் .- மா நல்ல

ஞான சமுத்திரமே , நல்ல சுமுத்திரையே ,
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்ட ஆகமம் .- மா நல்ல

உலகோர்க் குயிர் துணை , உண்டோ அதற்கினை ?
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம் - மா நல்ல

எல்லையில்லா விஸ்தாரம் ,எவர்க்கும் பர மாகரம் ,
வல்ல பரனின் வேதம் ஆகமம்



மகிழ் மகிழ் மந்தையே, கீர்த்தனை 63

பல்லவி

மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !

அனுபல்லவி
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;
நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று - மகிழ்

சரணங்கள்
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,
ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்

தந்தை வளபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;
மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்

மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்

பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று

Friday, November 6, 2009

வையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68

பல்லவி

வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க .

அனுபல்லவி

பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,
போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க - வைய

சரணங்கள்

வான்கள் மடமடபோ டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,
பானுவும் மதி அனைத்து மங்கிடவே
பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய

முக்கிய தூதநெக்காளமே தொனிக்க
முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க
ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க - வைய

யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு -வைய

அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;
படைத்திடுவாயிந்தக் கனமுனை .ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம் -வைய

தேவா இரக்கம் இல்லையோ ? கீர்த்தனை 148

பல்லவி

தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு

தேவா இரக்கம் இல்லையோ ?

அனுபல்லவி

ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின்

மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ,ஒரே .- தேவா

சரணங்கள்

எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்

இல்லாமை நீக்கும் அருளே ,-கொடும்

பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்

கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா!-தேவா

எங்கும் நிறைந்த ஜோதியே ,-ஏழைப்

பங்கில் உறைந்த நீதியே ,-எங்கள்

சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ் க்ரீடாதிபதி !- தேவா

வேதாந்த வேத முடிவே ,-ஜெக

ஆதாரம் ஆன வடிவே ,-ஐயா,

தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே ; யேசு

நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் கீர்த்தனை 268

பல்லவி

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .

அனுபல்லவி

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்

சரணங்கள்

பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் - பாலர்

தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.--பாலர்

இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்

சகோதரர்கள் ளொருமித்து கீர்த்தனை 223

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .

Friday, October 30, 2009

கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35

பல்லவி

கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று

அனுபல்லவி

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்

சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்

தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்

முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்

மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்

அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்

அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்

எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்

வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்

அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்

ஆதி பிதா குமாரன் -கீர்த்தனை 10

பல்லவி
ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.



அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி


சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319

பல்லவி

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

ச்ரணங்கள்

எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்

நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்

சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்

இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

Wednesday, September 2, 2009

இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183

பல்லவி

இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மாற்ற

எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன்

எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;

நேசனையுங் கூட நம்பேன்.-நான்

இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்

உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;

உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்

உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு

பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்

பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;

இருதயத்தின் நிலை அசைய -அப்போ

தேசுவே என் முழு நம்பிக்கையாமே.-இயேசு

சோதியாய் அவர் வரும் போது-நான்

சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;

நீதியாம் ஆடை தரிப்பேன் ,-சதா

நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் - இயேசு

நெஞ்சமே ,தள்ளாடி நொந்து கீர்த்தனை 204

பல்லவி

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .

சரணங்கள்

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச

Monday, August 31, 2009

வேளை இது சபையே கீர்த்தனை 125

பல்லவி

வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே கீர்த்தனை 178

பல்லவி

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறை உண்டு நீ சொல் ,மனமே

சரணங்கள்

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல் குயர்ந்தோர்,உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுக பத்திர மருளும் -என்

பாபமோ ,மரணமோ ,நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ,ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமோ தீர்த்தோர் சற்குரு நாதன் ;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே மகிழாய் .--என்

ஆசி செய்திடுவார் ,அருள் மிக அளிப்பார்
அம்பரந்த் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் ;முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும் -என்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் ,
கடைசி மட்டும் கைவிடா திருப்பார் ;
பவமன்னிப்பளிப்பார்,பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் -என்

போனது போகட்டும், புவி வசை பேசட்டும் ,
பொல்லான் அம்புகள் எய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் ,அருள் மழை பெய்திடும் ,
அன்பு மிகும பேரின்ப மெனக்கருள் -என்

வீராதி வீரர் இயேசு சேனை கீர்த்தனை 229

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .

திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .

அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .

சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .

ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்

Sunday, August 30, 2009

உன்னையன்றி வேறே கெதி கீர்த்தனை 326

பல்லவி

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமி!

அனுபல்லவி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! - ஆசை என் யேசு ஸ்வாமீ!- உன்னை

சரணங்கள்

பண்ணின துரோகமெல்லாம்- எண்ணினா லெத்தனை கோடி
பாதகத்துக்குண்டோ எல்லை -பர தவித்தேனே தேடி ,
கண்ணினாலுன் திருவடிக் -காண நான் தகுமோ தான்?
கடையனுக்கருள் புரி -மடியுமுன் யேசு ஸ்வாமீ! - உன்னை

அஞ்சியஞ்சித் தூர நின்றென்- சஞ்சலங்களை நான் சொல்லி ,
அலைகடல் துரும்பு போல்- மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த -வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து -க்ருபை வை யேசு ஸ்வாமீ! -உன்னை

எத்தனை கற்றாலும் தேவ -பக்தி யேது மற்ற பாவி ,
எவ்வளவு புத்தி கேட்டும் -அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் -கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப்- பிழைக்கவை யேசு சுவாமீ ! -உன்னை

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டா லாவதென்ன ?
கல்லைப் போல் கடினங் கொண்ட - கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன்-உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் -உருக வை யேசு ஸ்வாமீ -உன்னை







Thursday, August 6, 2009

எங்கே சுமந்து போகீறீர்

பல்லவி
எங்கே சுமந்து போகிறீர், சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர், இந்த கானலில் உமது
அங்கம் முழுவதும் நோக, ஐயா ஏன் இயேசு நாதா- எங்கே.

தோளில் பாரம் அழுத்த, தூக்க பெலம இல்லாமல்
நாளும் தத்தளிக்கவே , தாப சோப உற, நீர்- எங்கே

வாதையினால் உடலும் வாடி தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாக தாங்கி வர- எங்கே

தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர- எங்கே

வல்ல பேயை கொல்லவும், மரணந் தன்னை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே

மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்கா சுமையை எடுத்து- எங்கே

Wednesday, July 29, 2009

ஏசு கிறிஸ்து நாதர் கீர்த்தனை 93

பல்லவி



ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .



சரணங்கள்



மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு



அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு



வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு



தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு

பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்

Monday, July 27, 2009

அருமை ரட்சகா கூடி வந்தோம் கீர்த்தனை 259

பல்லவி

அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .

அனுபல்லவி

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு

சரணங்கள்

ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் - அரு

ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு

உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு

கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு

எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு

பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு
.

ஆண்டவர் பங்காக அனைத்தையும் கீர்த்தனை 230

பல்லவி

ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,

அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்

இன்பந்தனைப் பாரும் .

அனுபல்லவி

வான்பல கனிகளைத் திறந்தாசீர்

வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்

நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று

ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்

சரணங்கள்

வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்

விண்ணவர் கோமானே -அந்த

மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட

விதித்தது தானே .

வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,

வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,

ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்

உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்

ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய

அருட்பணி பேண, -தேவ

ஊழியரைத் தாங்கி உன்னத போதனை

ஓதும் நன்மை காண ,

ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்

எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,

சாலவறிவு நாகரீக மற்றவர்

தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்

நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்

யாவும் நமக்கீந்து ,-நல்ல

இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து

இவ்வாறன்பு கூர்ந்து ,

நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண

நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்

சம்மதமே அதிலும் தசம பாகம்

தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்

வா பாவி மலைத்து நில்லாதே கீர்த்தனை 124

பாலவி
வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

சரணங்கள்
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன் - வா

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .- வா

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ? - வா

பல்லவி

அருமருந்தொரு சற்குரு மருந்து ,

அகிலமீடேற இதோ திவ்யமருந்து .

சரணங்கள்

திருவளர்தெய்வம் சமைத்த மருந்து ,

தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து .

இருதய சுத்தியை ஈயுமருந்து ,

இகபரசாதனம் ஆகும் மருந்து .

ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து ,

அவனியோர் அழியா கற்பக மருந்து .

சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ,

ஜீவன் முத்தி தருஞ்சேணுள்ள மருந்து .

பணமில்லை இலவசமான மருந்து,

பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து .

என்றும் அழியாத தேவருள் மருந்து ,

என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து .

Sunday, July 26, 2009

ராச ராச பிதா மைந்த கீர்த்தனை 91

பல்லவி

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த

யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே !

அனுபல்லவி

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக -

சரணங்கள்

மாசிலாமணியே ! மந்தர ஆசிலா அணியே ! சுந்த்ர

நேசமே பணியே , தந்திர மோசமே தணியே;

நிறைவான காந்தனே ! இறையான சாந்தனே ! மறை - ராச

ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே ,முந்த

வேதா பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே ;

பத ஆமனாமானா ! சுதனாமனாமனா! சித- ராச

மேன்மையா சனனே ,நன்மை மேவுபோசனனே ,தொன்மை

பான்மை வாசனனே ,புன்மை பாவ மோசனனே ,

கிருபா கரா நரா! சருவேசுரா ! பரா ,திரு - ராச

வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே ,மைந்தர்

கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,

நரவேட மேவினான் ;சுரராடு கோவினான், பர -ராச

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கீர்த்தனை 90

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் ;-எங்கள்

குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன் .

சரணங்கள்

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் ;-எனை

ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் ;

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் ;-பவ

நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் ;

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய

சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் ;

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்

தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் .-கும்

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ;-ஒன்றும்

ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் ;

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது

சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் ;யூதர்

குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் ;

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் ;-என

தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்

Monday, July 20, 2009

ஆத்தும ஆதாயம் செய்குவோமே கீர்த்தனை 226

பல்லவி

ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது
ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம் .

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்
தஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செயவோமாகில்
அற்புதமான பலனை அடையலாம் .-

சரணங்கள்

பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் ,- ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்திவிட்டால் ,
ஆளுந்துரையவ னாயிருந்தாலூமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும

கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவ சுதன் -வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தை தானே ;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே

Tuesday, July 7, 2009

ஜெப சிந்தை என்னில் தாரும் கீர்த்தனை 206

பல்லவி
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -

சரணங்கள்

உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப

இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப

ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப

Saturday, June 27, 2009

யேசு ராசா எனை ஆளும் நேசா கீர்த்தனை 159

பல்லவி
யேசு ராசா -எனை-ஆளும் நேசா !

சரணங்கள்
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே ,-மனு
வேலே, மாமறை நூலே , தேவ செங்
கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு

தாவீ தரசன் மைந்தா -நின்
சரணம் சரணம் ,எந்தா !-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்; மிக வந்தனம் ,வந்தனம் !- யேசு

ஐயா, என் மனம் ஆற்றி ,-உன
தடிமை என்றனைத் தேற்றிக் -குண
மாக்கி ,வினை நீக்கிக் கை
தூக்கி ,மெய் பாக்கியம் கொடு -யேசு

சுத்த திருத்துவ வஸ்துவே ,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே ,-பரி
சுத்தனே ,கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம் -யேசு

மங்களம் ஈசாவே, -வளம் மிகும்
சங்கையின் ராசாவே ,-நரர்
வாழ்வே ,மன் னாவே, மெய்த்
தேவே , உமக கோசன்னாவே !- யேசு

ஐயையா நான் வந்தேன் , தேவ - கீர்த்தனை 156

பல்லவி

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா


உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா


எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

Thursday, June 25, 2009

உருகாயோ நெஞ்சமே கீர்த்தனை 56

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார் !
கரங் கால்கள் ஆணியேறித்
திரு மேனி நையுதே !


மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர் தாம் ,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.

தாக மிஞ்சி நா வறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய் ,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ ?

ஒரு மருந்தரும் குரு மருந்-து கீர்த்தனை 106

பல்லவி

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே .

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து ,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து ,
வரும் வினைகள் மாற்றும் மருந்து
வறுமையுளோர்க்கே வாய்த்த மருந்து -குரு

சரணங்கள்

சிங்கார வனத்தில் செழித்த மருந்து ,
ஜீவ தரு மீதில் படர்ந்த மருந்து ,
அங்கு விளை பவம் மாற்றும் மருந்து ,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து -குரு

மோசே முதல் முன்னோர் காணா மருந்து ,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து ,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து -குரு

தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து ,
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து ,
மனுவை உலகினில் வந்த மருந்து - குரு

செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து ,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து ,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து -குரு

விசுவாசியின் காதில் பட கீர்த்தனை 108

பல்லவி

விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்

விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் .

சரணங்கள்

பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவதுவே ;

முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த பெயரே .- விசு

துயரையது நீக்கிக் காயமாற்றி குணப்படுத்தும் ;

பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும் -விசு

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும் ,

மாயை கொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் .-விசு

எல்லை இல்லாக் கிருபைத் திரள் ஏற்று நிறைந்திருக்கும் ,

எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே .- விசு

என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே ,முடிவே ,

என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும், தேவே .-விசு

Wednesday, June 24, 2009

ஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153

பல்லவி

யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட

இழிஞன் எனை மீட்டருள் ,

ஏசுவே,கிரு பாசனப்பதியே

சரணங்கள்

காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு

கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !

நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு

பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட

தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,

புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு

எத்தனை திரள் என் பாவம் கீர்த்தனை 138

பல்லவி

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே !

எளியன் மேல இரங்கையனே .

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;

நிலைவரம் எனில் இல்லை ;நீ என் தாபரமே ,-எத்

சரணங்கள்

பத்தம் உன் மேல எனக்கில்லை என்பேனோ ?

பணிந்திடல் ஒழிவேனோ ?

சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவில்

தோன்றுது காயங்கள் தூய சிநேகா!- எத்

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே

இடைவிடாதிருக்கையிலே

உந்தன் மிகுங் கிருபை ,ஓ! மிகவும் பெரிதே

உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் !-எத்

ஆயங் கொள்வோன் போல் ,பாவ ஸ்திரி போல்

அருகிலிருந்த கள்ளன் போல் ,

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;

நீ எனக்காகவே மரித்தனை ,பரனே !-எத்

கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன் ,

கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;

இட்டமாய் மகன் என்ப பாத்திரன் அலன் நான்

எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! -எத

Tuesday, June 23, 2009

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே கீர்த்தனை 333

பல்லவி

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே !

அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,- எங்கும்

சரணங்கள்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் .- எங்கும்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே;
பல்வலி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் .-எங்கும்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி ?
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ ?-எங்கும்

சுத்த சுவிஷேசம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் -எங்கும்

இம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306

பல்லவி


இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த


எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.



அனுபல்லவி


நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து


நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்



சரணங்கள்

காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,

கனாவைப் போலேயும் ஒழியும்;

வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,

மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;

கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்

கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;

பரம பாதையைத் தொடர்ந்தோம் ;

வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;

வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;

கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்

சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்

சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு

தந்து, நொறுங்கினதைக் கட்டிக்

கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக

கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று

தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ

மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்

Sunday, June 21, 2009

காலையில் தேவனைத் தேடு கீர்த்தனை 276

பல்லவி

காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு .

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,

சீரான நித்திய ஜீவனை நாடு .- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே ,-மனு

மைந்தனென நாமம் வைத்திருந்தாரே ;

உன் சிருட்டிகரை நீ உதயத்தில்லெண்ணு

உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு .- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு ;-கெட்ட

பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ;

ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்

சிந்தனை செய் ;மனுவேலனைப் பணிய .-காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை

செய்யா திருங்களென்றார் மனதார ;

பரலோக செல்வ மவர்க்கு பலிக்கும் ;

பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் -காலையில்

வேலையுனக்குக் கைகூட -சத்ய

வேதன் கிருபை வரத்தை மன்றாட ,

காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே ,

கண் விழித்து ஜெபஞ் செயும்மென்றரே

Thursday, June 18, 2009

பக்தருடன் பாடுவேன் கீர்த்தனை 275

பல்லவி



பகதருடன் பாடுவேன் -பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்



அனுபல்லவி



அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த



சரணங்கள்



அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும் ,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த

இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே ,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த

தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில் ,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி ,
தூயா ,திருப்பாதத் தரிசனம் தந்தருள்- பக்த

என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170

பல்லவி
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .

அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்

சரணங்கள்

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்

சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்

உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்

அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்

அடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168

பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன்
அடைக்கலம் அடைக்கலமே !

அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை

சரணங்கள்
ஆசையோடு பாவமத்தில் அலைந்து திரிந்தேனே ,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே ;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்ந்தருள் !-அடை

கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன் ;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே ,
கிட்டி வந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!- அடை

சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும் ;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!-அடை

என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தாயல்லவோ

Monday, June 15, 2009

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா? கீர்த்தனை 72

பல்லவி

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

பரகதி திறந்து பாரினில் பிறந்து ,

நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,

சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,

ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

Thursday, June 11, 2009

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !

பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !

மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே

Saturday, June 6, 2009

பாவியாகவே வாறேன் கீர்த்தனை 155

பல்லவி
பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன் .

சரணங்கள்
பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் -பாவி

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே ;
தேவா , உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் -பாவி

பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் -பாவி

ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன் ,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் -பாவி

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் ;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் -பாவி

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான் -பாவி

சுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி
சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந்

சரணங்கள்

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே ,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் ;-பவத் துயர்
போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே ,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட ,-வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் -சுந்

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங் கிருபை தங்கி வாழவே ,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே ,
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும் ,
உயர்ந்து -வாழ, தீயோன்
பயந்து -தாழ, மிக
நயந்து க்ரிஸ்துவுக்கு ஜெயந்தான் , நயந்தான் என்றும்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனை 77

பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்

மானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்

துதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் .
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் .- துதி

மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்.
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் .- துதி

திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் .-

அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் ,
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் .-துதி

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்.
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் .-துதி

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் .
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் -துதி

Saturday, May 30, 2009

எங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188

பல்லவி

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .

சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே

வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே

எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே

உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே - எங்கே

தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே

ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்

Thursday, May 28, 2009

உன்றன் சுய மதியே கீர்த்தனை 121

பல்லவி
உன்றன் சுயமதியே நெறி என் று
உகந்து சாயாதே ;-அதில் நீ
மகிழிந்து மாயாதே .

சரணங்கள்
மைந்தனே ,தேவ மறைப்படி,யானும்
வழுத்தும் மதி தனைக் கேளாய் ;-தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய் .-உன்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ ,
வந்து விளையுமே கேடு ;-அதின்
தந்திர போக்கை விட்டோடு ;கதி தேடு ;-உன்


துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே ;-தீயர்
கெட்ட வழியில் நில்லாதே ;-அது தீதே ;-உன்

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே ;-அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே,-உன்


நான் என்ற எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் ; -அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் ;மனஸ்தாபம்; -உன்

Wednesday, May 27, 2009

ராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272

பல்லவி

ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்

ராஜ்யம் புவிஎணககும் மகா மாட்சியாய் விளங்க

அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயாவே!

அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

சரணங்கள்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,

மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் !

நாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,

மேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் !

நல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்

புன்னகையொடு நிற்பானேன் ? பூமுடி சூட்டுங்கள் !

இந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,

சிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் !


யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,

ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்


சகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்

மகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்

மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267

பல்லவி

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69

பல்லவி

என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் !

இயம்பலாகாதே ,

மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே .

சரணங்கள்

கூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம் ;

நாடியே நம்மை தேடியே வந்த

நாதனைப் போற்றிடுவோம் .

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்

பரிகரித்தாரே;

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே .

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

அருளினதாலே ;

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகர வேண்டியதே .

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்

ஜெயக் கொடியுடனே,

மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற

மன்னனைத் தோத்தரிபோம்.

Thursday, May 21, 2009

இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142

இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர

அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர

தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர

Wednesday, May 20, 2009

கிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே

கிருபை புரிந்தெனை ஆள்

சரணங்கள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,

வரில் நரனாகிய மா துவின் வித்து !- கிரு


பண்ணின பாவமெலாம் அகல்வித்து ,

நின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு


தந்திர வான் கடியின் சிறை மீட்டு

எந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு


தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி ! என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ


தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து

நல்வினையே செய் திராணி அளித்து .-கிரு


அம்பரமீ துறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த



மன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

தெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8

தெய்வன்பின் வெள்ளமே ,திருவருள் தோற்றமே ,
மெய்ம் மன தானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா , நின் அடி பணிந்தேன் .


மூர்க்ககுனம் கோபம் மோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கிடத் தடுமாறி தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்.


சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோயான் ?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன் .



பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி
தேவே தவறிடினும்
கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா !

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன் .

மரணமோ ஜீவனோ ,மறுமையோ ,பூமியோ ,
மகிமையோ ,வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ ,உயர்ந்ததோ ,தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை ?



வரவேணும் என தரசே கீர்த்தனை 64

பல்லவி

வர வேணும் ,என தரசே ,

மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி

அருணோ தயம் ஒளிர பிரகாசா ,

அசரீரி ஒரே சரு வேசா !- வர

வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,

ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,

தாதாவும் தாய் சகலமும் நீயே :

நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர

படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,

முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,

இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,

இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர

வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,

கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,

ஞானகரமே, நடு நிலை யோவா ,

நண்பா , உனத நன்மையின் மகா தேவா !

Monday, May 18, 2009

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் -உமை மா அரசே
தோத்ரம் உம மாட்சிமைக்கே -பரனே
துந்துமி மாட்சிமைக்கே -பிதாவே .

சுதனே யிரங்கும்-புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த - தூய செம்மறியே,
சுத்தா ஜெபங் கேளும் -பரன்வலத்
தோழா ஜெபங் கேளும் -கிறிஸ்தே .

நித்ய பிதாவின் -மகிமையில் நீரே
நிமலாவியினோ - டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே -உன்னத
நேயருக் கர்ச்சனையே - ஆமென்

கதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன் .

கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே -என் இஷ்டம் .

ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் -போற்றுவேன் .

ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் -உயர்த்துவேன் .

மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை -சிந்திப்பேன் .

அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே -ஒதுங்குவேன் .

ஆத்துமம் தேவனைத் அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் .

சருவலோகதிபா நமஸ்காரம் கீர்த்தனை 5

சருவ லோகதிபா நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் !
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் .

திரு அவதாரா, நமஸ்காரம் !
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் !
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் !

பரிசுத்த ஆவி நமஸ்காரம் !
பரம சற்குருவே நமஸ்காரம் !
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் !


முத்தொழிலோனே நமஸ்காரம் !
மூன்றில் நின்றோனே நமஸ்காரம் !
கர்த்தாதி கர்த்தா, கருணை சொரூபா,நித்ய திரியேகா, நமஸ்காரம் .

Tuesday, May 5, 2009

ஏசுவைப் போல நட கீர்த்தனை 220

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -



சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-



சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --


எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்

வாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203

பல்லவி

வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா

தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா

நித்தம் முயல் மனமே கீர்த்தனை 219

பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்


அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்

Wednesday, April 29, 2009

சீர்திரியேக வஸ்த்தே நமோ ,நமோ ,நின் கீர்த்தனை 4

பல்லவி
சீர்திரியேக வஸ்த்தே நமோ ,நமோ ,நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

அனுபல்லவி
பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந் தூய வேதா, நமோ, நமோ!- சீர்

சரணங்கள்
தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
ஆதரிப்போனே - நமோ நமோ
சொந்தக் குமாரன் தந்தாய் ,
சொல்லரும் நலமீந்தாய் ,
எந்தளிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ - சீர்

எங்கள் பவத்தினாசா நமோ நமோ , புது
எருசலேம் நகர் ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற ,
துங்க மந்தையிர் சேர , நமோ நமோ நமோ - சீர்

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ , திட
பலமளித் தெமைக்காவா, நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி ,
கபடற்ற மனசுத்தி ,
திருமொழி பற்றும்பக்தி ,நமோ, நமோ ,நமோ- சீர்



திரிமுதல் கிருபாசனனே, சரணம் கீர்த்தனை 2

திரிமுதல் கிருபாசனனே, சரணம் !

ஜெக தல ரட்சக தேவா ,சரணம் !

தினம் அனுதினம் சரணம் ;-கடாட்சி!

தினம் அனுதினம் சரணம் , -சருவேசா !

நலம் வளர் ஏக திரித்துவா ,சரணம் !

நமஸ்கரி உம்பர்கள் நாதா ,சரணம் !

நம்பினேன் இது தருணம் ; தருணம் ,

நம்பினேன் ,தினம் சரணம் - சருவேசா!

அருவுருவே , அருளரசே ,சரணம் !

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்

அதிகுணனே,தருணம் -கிரணமொளிர்

அருள் வடிவே ,சரணம் -சருவேசா !

உலகிட மேவிய உனதா -சரணம் !

ஓர் கிருபாசன ஒளியே ,சரணம் !

ஒளி அருள்வாய் ,தருணம் - மனுவோர்க் கு

உத்தமனே ,சரணம் -சருவேசா

Monday, April 27, 2009

தாசரே இத்தரணியை அன்பாய் கீர்த்தனை 224

பல்லவி
தாசரே இத்தரணியை அன்பாய்
யேசுவுக்கு சொந்தமாக்குவோம் .

அனுபல்லவி
நேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்
காண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,
வெளிச்சம் வீசுவோம் .- தாச

சரணங்கள்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை,
வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,
நமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச

பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவிசெய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து ,
தமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,
நிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச


மார்க்கம் தப்பி நடப்போரை
சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;
ஊக்கமாக ஜெபித்திடுவோம் ,
நாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச

வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,கீர்த்தனை 286

பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர் ,பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!-

சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம் சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய் ;
பொல்லாப் பேயின் மோசம் நின்றென்னைக் காத்தாய்-வினை

சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தனவானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதிதானேசென்றன ;
அடியேனும் பள்ளி கொள்வேனே ;-வினை

ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம் ;
ஜெகக் தின்பங்கள் விழைந்து சேர்த்தல் நிர்ப்பந்தம் ;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம் ;
பட்சம் வைத்தாள்வையேல் ,அதுவே ஆனந்தம்; -வினை

இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல்,உன் முத்தி தாராய்; -வினை
.

Saturday, April 25, 2009

பாடித் துதி மனமே கீர்த்தனை 19

பல்லவி
பாடித் துதி மனமே ;பரனைக் கொண்டாடித்
துதி தினமே .

அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து -பாடி

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக- பாடி

எத்தனை தீர்க்கர் ,அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் ,இரத்த சாட்சிகள் ,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் -பாடி







Thursday, April 23, 2009

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் கீர்த்தனை 260



பல்லவி

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? -அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.

அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-

சரணங்கள்

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்

எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

வருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய

வியாழ னிரவில் வியாகுலத்தோடே

விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே

முடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி

மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே-அதிசய

வேத புத்தகமே வேத புத்தகமே கீர்த்தனை 212

பல்லவி
வேத புத்தகமே ,வேத புத்தகமே ,
வேத புத்தகமே ,விலை பெற்ற செல்வம் நீயே .

சரணங்கள்
பேதைகளின் ஞானமே ,-பெரிய திரவியமே ,
பாதைக்கு நல தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே !

என்னை எனக்குக் காட்டி -என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே;

துன்ப காலம் ஆறுதல் -உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்- என்றும் நம்பின பேர்க்கே ,-

பன்னிரு மாதங்களும் - பரித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார் ,-

வாரா வினை வந்தாலும் சோராதே,மனமே கீர்த்தனை 203

பல்லவி
வாரா வினை வந்தாலும் ,சோராதே ,மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்லதாரகமே

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே .- வாரா

பெற்ற பிதாப் போல் உன் குற்றம் எண்ணாதே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே .- வாரா

தன் உயிர் ஈந்திட்ட உன் ஏசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே, நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையே?
வானவனை முற்றும் தான் அடைவாயே ! - வாரா

Wednesday, April 22, 2009

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் கீர்த்தனை 189

பல்லவி
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ,யேசுவே.

அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-

நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-



இயேசு நேசிக்கிறார் கீர்த்தனை 185

இயேசு நேசிக்கிறார் ,- இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ !

நீசனமெனைத் தான் இயேசு நேசிக்கிறார் ,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் -

பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென்ல்
நித்தம் ஆச்சரியம் .-

ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் ;
அதை நினைநதவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன் -

ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் இயேசெனைத் தானே சித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்

வாரும் ஐயா போதகரே கீர்த்தனை 173

வாரும் ஐயா போதகரே ,
வந்தெம்மிடம் தங்கியிரும் ;
சேரும் ஐயா பந்தியினில்
சிரியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாரும் ஐயா !
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் .

நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க ,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே ,நலம் தருவாய்


உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்

பாதம் ஒன்றே வேண்டும் கீர்த்தனை 172

பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்


சரணங்கள்
நாதனே துங்க மெய் -தேவனே ,பொங்குதற்
காதலுடன் துய்ய -தூதர் தொழுஞ் செய்ய -பாதம்

சீறும் புயலினால்- வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற் போல் -நீர் மேல் நடந்த உன்-பாதம்

வீசும் கமழ் கொண்ட -வாசனைத் தைலத்தை
ஆசையுடன் -மரி- பூசிப் பணிந்த பொற் -பாதம்

போக்கிட மற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் தூக்கி நடந்த நற் - பாதம்

நானிலத்தோர் உயர் -வான் நிலத்தேற வல்
ஆணி துளைத்திடத் -தானே கொடுத்த உன் -பாதம்

பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு- நாதனே என்றும் உன்-பாதம்




ஆதாரம் நீர் தான் ஐயா கீர்த்தனை 180

பல்லவி
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.

அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு -

நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு -

கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே -

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -

Tuesday, April 21, 2009

தீய மனதை மாற்ற வாரும் கீர்த்தனை 102

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும் , தூய ஆவியே , - கன
நேய ஆவியே .

சரணங்கள்

மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
பாவி நான் .- தீய

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,- மருள்
தீர்க்கும், தஞ்சமே .- தீய

பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடி தான் ஐயா - ஒரு
பாவி நான் ஐயா ,-தீய

ஏக்கதோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே ,-தினம்
இதயம் அஞ்சவே .-

புதிய சிந்தை, புதிய ஆசை புதுபித்தாக்கவே,- அதைப்
புகழ்ந்து காக்கவே,- தீய

கிற்ஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
கிருபை தேடவே.- தீய

தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே.- தீய

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்து போற்றவே, மிக சிறப்பாய்
ஏற்றவே,- தீய

நம்பி வந்தேன் மேசியா கீர்த்தனை 167

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே ,-திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே .



சரணங்கள்

தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே;- வரு

தவீது குமார குரு பரமனுவேலே , நம்பி வந்தேனே ,-



நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் ;- நித

நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே .-



நாதனே கிருபை கூர் ; வேதனே , சிறுமை தீர் ,- அதி

நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.-



பாவியில் பாவியே , கோவியில் கோவியே கண

பரிவுடன் அருள் புரி அகல விடாதே; நம்பி வந்தேனே,-



ஆதி ஓலோலமே பாதுகா காலமே; உன

தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே

Monday, April 20, 2009

யேசு நசரையீ னதிபதியே கீர்த்தனை 84

யேசு நசரையீ னதிபதியே ,-பவ நரர் பிணை யென வரும் .

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ

சரணங்கள்

இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-



நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்

சத்திய் வேதத்தை தினம் தியானி, கீர்த்தனை 210

பல்லவி
சத்திய வேதத்தை தினம் தியானி
சசல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி
உத்தம ஜீவிய வழிகாட்டும் ,உயர் வானுலகில் உனைக்கூட்டும்-சத்

சரணங்கள்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலர்க்கினிய் பாலும் அதாம் ;படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துரு பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம் ,
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும்.-சத்தி

புலை மேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம்;
நிலையா நரர்வாணன் நிலைக்க நேயகாய கற்பம் அஅதாம் .-சத்தி

கதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது ;
புதிய எருசாலேமபதிக்குப போகும் பயணத் துணையும் அது ; சத்தி

ஏற்றுக் கொண்டருளுமே தேவா கீர்த்தனை 208

பல்லவி
ஏற்றுக் கொண்டருளுமே , தேவா,- இப்போ
தேழையேன் ஜெபத்தை யேசுவின் மூலம்.

சரணங்கள்

சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் ,
சந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும் ,
தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி .-

குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே ,
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுவதும் மேசியா மேல் வைக்கிறேன் ஸ்வாமி .-

மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி ,
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி ,
தேற்றிடும் புது பெலன் ஊற்றிடும் , ஸ்வாமி

விசுவாசம் பெருகி நிலத்திடச் செய்யும் ,
வெளிப்படும் மறை பொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப் போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

Sunday, April 19, 2009

நீயுனக்குச சொந்தமல்லவே ; கீர்த்தனை 131

பல்லவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே; மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே.

அனுபல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே ;
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் .

சரணங்கள்
சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே, திருரத்தம் , ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே;-

இந்த நன்றியை மறந்து போனாயோ ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ ?
சந்த தமுன திதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடை யதல்லவோ ?-

பழைய பாவத்தாசை வருகுதோ ?பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக் கடல் தள்ளுவானேன் ? -

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகை விட்டுப்
பிரியினும் அவர்கே மரிப்பாயே ,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் .-

Thursday, April 16, 2009

மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? கீர்த்தனை 129

பல்லவி
மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? - மோட்ச
வாழ்வைத் தருவேன் , இது பாராயோ ?

சரணங்கள்

அகத்தின் அசுத்தமெல்லாம் துடைபேனே ,- பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே,-

உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே , -அதை
உண்மையாய் அகற்ற யான் மரிததேனே-

பாவம் அனைத்துமே விட்டோடயோ ?-நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? -

உலக வாழ்வினை விட்டகல்வாயே,- மகா
உவப்பாய்க் கதி ஈவேன்: மகிழ்வாயே .-

உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே ,- அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே .-




குணப்படு, பாவி தேவ கோபம் கீர்த்தனை 127

பல்லவி
குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி -இப்போ

அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ -

சரணங்கள்
கர்த்தனை நீ மறந்தாய்,- அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய்,- பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்தி கெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்.-

துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ ?
மிக்கப் புலம்பாயோ? மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவ கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கத் தொடரயோ ?

தாவீ தரசனைப் போல் ,- தன்னை
தாழ்த்தும் ம்னாசேயைப் போல்
பாவி மனுஷியைப் போல்,-மனம்
பதைத்த பேதுரு போல்,
தேவனுகேற் காத தீமை செய்தேனென்று
கூவிப் புலம்பு நாள் ஆவியின் சொற்படி

உன்னை நீ நம்பாதே ,-இவ
வுலகை நம்பாதே !
பொன்னை நீ நம்பாதே ! -எப்
பொருளையும் நம்பாதே !
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அன்னவரைப் பற்று .-




Monday, April 13, 2009

இவரே பெருமான் கீர்த்தனை 75

இவரே பெருமான் மறற
பேர் அளவே பூமான், -இவரே பெருமான்

சரண்ங்கள்
கவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு
பவவினை யாதுமே தெரியார் ,இப்
புவன மீது நம்க்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம்,-பவ
கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பவபிணி தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
வல்லமையில் மிக்க உபகாரி- எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு
மறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன்

அலகை தனை ஜெயித்த வீரன் ,-பல
உலகை ரட்சித்த எழிற் பேரன், விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்.

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்.-

ஏசுவையே துதி செய் கீர்த்தனை 73

ஏசுவையே துதி செய் , நீ மனமே
ஏசுவையே துதி செய்

சரணங்கள்

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க



Saturday, April 11, 2009

யூத ராஜ சிங்கம் கீர்த்தனை 324

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிரித்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.-

சரணங்கள்
வேதாளக் கனங்கள் ஓடிடவே.
ஓடிடவே,உருகி வாடிடவே.-- யூத

வானத்தின் சேனைகள் துதித்திடவே ,
துதித்திடவே பரனைத் துதித்திடவே .-யூத

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்ட்ன,
தெறிபட்டன, நொடியில் முறி பட்டன . -யூத

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே ,பயத்தை என்றும் நீக்குதே.- யூத

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அக மகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்-யூத

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை ,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை .- யூத

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் ,
பாதம் பணிவோம், பதத்தை ச சிரமணிவோம்.

Wednesday, April 8, 2009

கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங் காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
நல்லாத்தூமாவையும் நாடோறும் காப்பவர்

Tuesday, April 7, 2009

ஆவியை மழை போலே யூற்றும் கீர்த்தனை 98

பல்லவி
ஆவியை மழை போலே யூற்றும் -பல
ஆடுகளை ஏசுமந்தையிற் ம்ந்தையிற் கூட்டும்

அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கி றிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கி டச் செய்யும் .-

சரணங்கள்
அன்பினால் ஜீவனை விட்டீர் ;- ஆவி
அருள் பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலேபொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும் .-

சிதறுண்டலைகிற ஆட்டைப பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து ,
பதறாதே நான் தான் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கை யருளும் .

காத்திருந்த பல பேரும் - மன்ங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்

தோத்திர கீதங்கள் பாடி எங்கும்
சுவிஷேச ஜெயததையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேக ரெழும்ப
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்


ஆவியை அருளுமே, சுவாமீ கீர்த்தனை 99

பல்லவி
ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்
நற்கனி தேடிவருங் காலங்களல்லவோ?
நானொரு கனியற்ற பாழ் மர மல்லவோ
முற் கனி முக் காண வெம்பயி ரல்லவோ?
முழு நெஞ்சம் விளை வற்ற உவர் நில மல்லவோ ?

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம் சந்தோஷம் , நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம் , தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை .-

தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊறறும்
திரி யவியாமலேதீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்த வரந் தந்தென் குறைகளைத் தீரும்

தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை 187

பல்லவி
தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-

சரணங்கள்

ஜீவ் கால்ம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

உலகோர் என்னை நெருக்கிப
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-

கஷ்ட நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-

உந்தஞ் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-

ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் .