Wednesday, May 20, 2009

தெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8

தெய்வன்பின் வெள்ளமே ,திருவருள் தோற்றமே ,
மெய்ம் மன தானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா , நின் அடி பணிந்தேன் .


மூர்க்ககுனம் கோபம் மோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கிடத் தடுமாறி தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்.


சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோயான் ?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன் .



பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி
தேவே தவறிடினும்
கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா !

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன் .

மரணமோ ஜீவனோ ,மறுமையோ ,பூமியோ ,
மகிமையோ ,வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ ,உயர்ந்ததோ ,தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை ?



No comments:

Post a Comment