Saturday, May 30, 2009

எங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188

பல்லவி

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .

சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே

வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே

எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே

உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே - எங்கே

தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே

ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்

No comments:

Post a Comment