Wednesday, May 20, 2009

கிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே

கிருபை புரிந்தெனை ஆள்

சரணங்கள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,

வரில் நரனாகிய மா துவின் வித்து !- கிரு


பண்ணின பாவமெலாம் அகல்வித்து ,

நின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு


தந்திர வான் கடியின் சிறை மீட்டு

எந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு


தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி ! என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ


தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து

நல்வினையே செய் திராணி அளித்து .-கிரு


அம்பரமீ துறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த



No comments:

Post a Comment