Monday, May 18, 2009

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் -உமை மா அரசே
தோத்ரம் உம மாட்சிமைக்கே -பரனே
துந்துமி மாட்சிமைக்கே -பிதாவே .

சுதனே யிரங்கும்-புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த - தூய செம்மறியே,
சுத்தா ஜெபங் கேளும் -பரன்வலத்
தோழா ஜெபங் கேளும் -கிறிஸ்தே .

நித்ய பிதாவின் -மகிமையில் நீரே
நிமலாவியினோ - டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே -உன்னத
நேயருக் கர்ச்சனையே - ஆமென்

No comments:

Post a Comment