Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .

No comments:

Post a Comment