Thursday, September 13, 2012

ஐயனே ! உமது திருவடி களுக்கே

1.ஐயனே ! உமது திருவடி களுக்கே
 ஆயிரந்தரந் தோத்திரம் !
 மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
 விவரிக்க எம்மாத்திரம்?

2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
    சேர்ந்தர வணைத்தீரே:
    அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
    யாகவா  தரிப்பீரே .

3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
   ஏழையைக் குணமாக்கும்
   கருணையாய்  என்னை உமதகமாக்கிக்
   கன்மமெல்லாம் போக்கும்.

4. நாவிழி செவியை நாதனே, இந்த
   நாளெல்லாம்  நீர் காரும்.
  தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
  தெய்வமே , அருள் கூரும் .

5.கைகாலால் நான் பவம் புரியாமல்
  சுத்தனே துணை நில்லும்
  துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
  தூய் வழியே செல்லும்.

6. ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
   உதவி நீர் செய்வீரே .
   ஏழை நான் உமக்கே இசையானால் ஆவி
  இன்பமாய்ப் பெய்வீரே.

7.  அத்தனே ! உமது மகிமையை நோக்க 
    அயலான் நலம் பார்க்கச் 
    சித்தமாய் அருளும், மெய் விசுவாசம் 
    தேவனே உமக் கேற்க.
 
8. இன்றும்  என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ 
    டேயடியேன்  நடத்தப் 
    பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப் 
    பூவுலகில் கடத்த 
 
9. இந்த நாளிலுமே திருச்சபை வளர 
    ஏகா தயைகூரும் 
    தந்தையே , நானதற்  குதவியாயிருக்கத் 
   தற்பரா வரந் தாரும் 
 
 
 
 
 
 


   

Sunday, September 9, 2012

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும் - உம்
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
சரணங்கள்
1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
   நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
   தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
   சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
   சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா - ஜோதி

2. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
    உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
   விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
   மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
   மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
  மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
  தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
  தண்ணீரில்    நடந்த பாதம் சவண்டதுமேனோ?
 சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே  - ஜோதி 








இயேசுவை நாம் எங்கே காணலாம்?

பல்லவி
இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ?


அனுபல்லவி
பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா ?
கனி நிறைந்த சோலை நடுவே காண முடியுமா?

சரணம்
ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அலைந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே - இயேசு

வானமதில் பவனிவரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியில் வீசும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம்  கூறிட மாட்டாயோ- இயேசு

கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என்முன்னே கர்த்தர் இயேசு நின்றார் -இயேசு 






நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே

பல்லவி

நன்றியால்  நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே ... ஆ ! ஆ !

சரணம்
1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
  ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
  சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
  தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.

2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
 எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
 துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்

3. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
    உதவிகள் செய்திட பல்பணியர்
   அறவழி   காட்டிட அருள் பணியர்
  அன்புடன் ஏற்றிட ஆண்டவர்

4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
   உடலதில் இறைவனுக்கோர் இதயம்
  பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
   திருமறை பேசிடும் வானுலகம்

                                                                       -  எஸ் .இஸ்ரவேல்
                                           
 

நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா

பல்லவி

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதி பாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தேகொஸ்தே நாளிலே
   உந்தனாவி ஈந்தீரே
   இந்த வேலையில் இறங்கிடுவீரே
  விந்தை செய் விண் ஆவியே

2.மெத்த அசுத்தன் நானே
   சுத்தாவி கொண்டென்னையே
   சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
 
3.ஆவியின் கனி ஒன்பதும்
   மேவி நான் தந்திடவும்
    ஜீவியமெல்லாம் புவி மீதிலே
    சுவிசேடப் பணியாற்றவும்

4.பாவம் செய்யாதிருக்க
   பாரில் சாட்சி பகர
   பார் மீட்க வந்த பரமனையே
   பாரோர்க்கு எடுத்துரைக்க