Sunday, September 9, 2012

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54
பல்லவி
கல்வாரி மலையோரம் வாரும் - உம்
பாவம் தீரும்.
அனுபல்லவி
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குராரே.
சரணங்கள்
1.லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய் திரண்டு,
   நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு,
   தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
   சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு ,
   சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா - ஜோதி

2. ஒண்முடி மன்னனுக்கு முன்முடியாச்சோ
    உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ ?
   விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ ?
   மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ?
   மேசையன் அப்பன் கோபம் மேலே இதற்குமேலே- ஜோதி

3.மலர்ந்த சுந்தர கண்கள் மயங்கலுமோ
  மதுரிக்கும் திருநாவு வரண்டதுமேனோ
  தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ ?
  தண்ணீரில்    நடந்த பாதம் சவண்டதுமேனோ?
 சண்டாளர்கள் நம்மால் தானே நம்மால் தானே  - ஜோதி 








1 comment: