Tuesday, May 5, 2009

நித்தம் முயல் மனமே கீர்த்தனை 219

பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்


அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்

No comments:

Post a Comment