Wednesday, May 27, 2009

மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267

பல்லவி

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

No comments:

Post a Comment