Friday, May 22, 2009

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69

பல்லவி

என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் !

இயம்பலாகாதே ,

மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே .

சரணங்கள்

கூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம் ;

நாடியே நம்மை தேடியே வந்த

நாதனைப் போற்றிடுவோம் .

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்

பரிகரித்தாரே;

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே .

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

அருளினதாலே ;

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகர வேண்டியதே .

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்

ஜெயக் கொடியுடனே,

மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற

மன்னனைத் தோத்தரிபோம்.

No comments:

Post a Comment