Wednesday, May 27, 2009

ராசாதி ராசன் யேசு ,யேசு மகாராசன் கீர்த்தனை 272

பல்லவி

ராசாதி ராசன் யேசு ,யேசு மகா ராசன் ,-அவர்

ராஜ்யம் புவிஎணககும் மகா மாட்சியாய் விளங்க

அவர் திரு நாமமே விளங்க ,-அவர் திரு நாமமே விளங்க ,

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயாவே!

அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலுயாவே

சரணங்கள்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் ,

மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள் !

நாலாதேசத் திலுள்ளோரே,நடந்து வாருங்கள் ,

மேலோகனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் !

நல்மனதோடு சொல்கிறேன் ,நாட்டர்களே ,நீங்கள்

புன்னகையொடு நிற்பானேன் ? பூமுடி சூட்டுங்கள் !

இந்த நல தேசத்தார்களே,ஏகமாய் கூடுங்கள் ,

சிந்தையில் மகிழ்வடைந்தே செயமுடி சூட்டுங்கள் !


யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள் ,

ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்


சகல கூட்டத்தார்களே, சாஸ்டாங்கம் செய்யுங்கள்

மகத்வ ராசரிவரே ,மாமுடி சூட்டுங்கள்

No comments:

Post a Comment