Monday, May 18, 2009

கதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன் .

கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே -என் இஷ்டம் .

ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் -போற்றுவேன் .

ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் -உயர்த்துவேன் .

மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை -சிந்திப்பேன் .

அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே -ஒதுங்குவேன் .

ஆத்துமம் தேவனைத் அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் .

No comments:

Post a Comment