Thursday, May 21, 2009

இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142

இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர

அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர

தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர

No comments:

Post a Comment