Thursday, May 28, 2009

உன்றன் சுய மதியே கீர்த்தனை 121

பல்லவி
உன்றன் சுயமதியே நெறி என் று
உகந்து சாயாதே ;-அதில் நீ
மகிழிந்து மாயாதே .

சரணங்கள்
மைந்தனே ,தேவ மறைப்படி,யானும்
வழுத்தும் மதி தனைக் கேளாய் ;-தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய் .-உன்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ ,
வந்து விளையுமே கேடு ;-அதின்
தந்திர போக்கை விட்டோடு ;கதி தேடு ;-உன்


துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே ;-தீயர்
கெட்ட வழியில் நில்லாதே ;-அது தீதே ;-உன்

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே ;-அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே,-உன்


நான் என்ற எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் ; -அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் ;மனஸ்தாபம்; -உன்

No comments:

Post a Comment