Tuesday, May 5, 2009

வாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203

பல்லவி

வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா

தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா

No comments:

Post a Comment