Wednesday, May 20, 2009

வரவேணும் என தரசே கீர்த்தனை 64

பல்லவி

வர வேணும் ,என தரசே ,

மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி

அருணோ தயம் ஒளிர பிரகாசா ,

அசரீரி ஒரே சரு வேசா !- வர

வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,

ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,

தாதாவும் தாய் சகலமும் நீயே :

நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர

படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,

முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,

இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,

இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர

வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,

கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,

ஞானகரமே, நடு நிலை யோவா ,

நண்பா , உனத நன்மையின் மகா தேவா !

No comments:

Post a Comment