Tuesday, May 5, 2009

ஏசுவைப் போல நட கீர்த்தனை 220

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -



சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-



சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --


எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்

No comments:

Post a Comment