Saturday, June 6, 2009

துதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் .
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் .- துதி

மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்.
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் .- துதி

திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் .-

அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் ,
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் .-துதி

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்.
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் .-துதி

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் .
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் -துதி

No comments:

Post a Comment