Thursday, June 18, 2009

என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170

பல்லவி
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .

அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்

சரணங்கள்

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்

சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்

உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்

அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்

No comments:

Post a Comment