Thursday, June 18, 2009

பக்தருடன் பாடுவேன் கீர்த்தனை 275

பல்லவி



பகதருடன் பாடுவேன் -பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்



அனுபல்லவி



அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த



சரணங்கள்



அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும் ,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த

இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே ,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த

தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில் ,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி ,
தூயா ,திருப்பாதத் தரிசனம் தந்தருள்- பக்த

No comments:

Post a Comment