Saturday, June 6, 2009

பாவியாகவே வாறேன் கீர்த்தனை 155

பல்லவி
பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன் .

சரணங்கள்
பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் -பாவி

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே ;
தேவா , உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் -பாவி

பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் -பாவி

ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன் ,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் -பாவி

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் ;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் -பாவி

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான் -பாவி

1 comment: