Thursday, June 25, 2009

உருகாயோ நெஞ்சமே கீர்த்தனை 56

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார் !
கரங் கால்கள் ஆணியேறித்
திரு மேனி நையுதே !


மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர் தாம் ,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.

தாக மிஞ்சி நா வறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய் ,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ ?

No comments:

Post a Comment