Saturday, June 27, 2009

யேசு ராசா எனை ஆளும் நேசா கீர்த்தனை 159

பல்லவி
யேசு ராசா -எனை-ஆளும் நேசா !

சரணங்கள்
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே ,-மனு
வேலே, மாமறை நூலே , தேவ செங்
கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு

தாவீ தரசன் மைந்தா -நின்
சரணம் சரணம் ,எந்தா !-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்; மிக வந்தனம் ,வந்தனம் !- யேசு

ஐயா, என் மனம் ஆற்றி ,-உன
தடிமை என்றனைத் தேற்றிக் -குண
மாக்கி ,வினை நீக்கிக் கை
தூக்கி ,மெய் பாக்கியம் கொடு -யேசு

சுத்த திருத்துவ வஸ்துவே ,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே ,-பரி
சுத்தனே ,கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம் -யேசு

மங்களம் ஈசாவே, -வளம் மிகும்
சங்கையின் ராசாவே ,-நரர்
வாழ்வே ,மன் னாவே, மெய்த்
தேவே , உமக கோசன்னாவே !- யேசு

No comments:

Post a Comment