Tuesday, July 7, 2009

ஜெப சிந்தை என்னில் தாரும் கீர்த்தனை 206

பல்லவி
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -

சரணங்கள்

உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப

இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப

ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப

No comments:

Post a Comment