Monday, July 20, 2009

ஆத்தும ஆதாயம் செய்குவோமே கீர்த்தனை 226

பல்லவி

ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது
ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம் .

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்
தஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செயவோமாகில்
அற்புதமான பலனை அடையலாம் .-

சரணங்கள்

பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் ,- ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்திவிட்டால் ,
ஆளுந்துரையவ னாயிருந்தாலூமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும

கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவ சுதன் -வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தை தானே ;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே

No comments:

Post a Comment