Monday, July 27, 2009

ஆண்டவர் பங்காக அனைத்தையும் கீர்த்தனை 230

பல்லவி

ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,

அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்

இன்பந்தனைப் பாரும் .

அனுபல்லவி

வான்பல கனிகளைத் திறந்தாசீர்

வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்

நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று

ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்

சரணங்கள்

வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்

விண்ணவர் கோமானே -அந்த

மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட

விதித்தது தானே .

வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,

வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,

ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்

உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்

ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய

அருட்பணி பேண, -தேவ

ஊழியரைத் தாங்கி உன்னத போதனை

ஓதும் நன்மை காண ,

ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்

எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,

சாலவறிவு நாகரீக மற்றவர்

தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்

நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்

யாவும் நமக்கீந்து ,-நல்ல

இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து

இவ்வாறன்பு கூர்ந்து ,

நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண

நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்

சம்மதமே அதிலும் தசம பாகம்

தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்

No comments:

Post a Comment