Monday, July 27, 2009

வா பாவி மலைத்து நில்லாதே கீர்த்தனை 124

பாலவி
வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

சரணங்கள்
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன் - வா

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .- வா

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ? - வா

No comments:

Post a Comment