Monday, July 27, 2009

பல்லவி

அருமருந்தொரு சற்குரு மருந்து ,

அகிலமீடேற இதோ திவ்யமருந்து .

சரணங்கள்

திருவளர்தெய்வம் சமைத்த மருந்து ,

தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து .

இருதய சுத்தியை ஈயுமருந்து ,

இகபரசாதனம் ஆகும் மருந்து .

ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து ,

அவனியோர் அழியா கற்பக மருந்து .

சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ,

ஜீவன் முத்தி தருஞ்சேணுள்ள மருந்து .

பணமில்லை இலவசமான மருந்து,

பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து .

என்றும் அழியாத தேவருள் மருந்து ,

என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து .

No comments:

Post a Comment