Wednesday, July 29, 2009

ஏசு கிறிஸ்து நாதர் கீர்த்தனை 93

பல்லவி



ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .



சரணங்கள்



மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு



அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு



வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு



தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு

பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்

No comments:

Post a Comment