Thursday, August 6, 2009

எங்கே சுமந்து போகீறீர்

பல்லவி
எங்கே சுமந்து போகிறீர், சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர், இந்த கானலில் உமது
அங்கம் முழுவதும் நோக, ஐயா ஏன் இயேசு நாதா- எங்கே.

தோளில் பாரம் அழுத்த, தூக்க பெலம இல்லாமல்
நாளும் தத்தளிக்கவே , தாப சோப உற, நீர்- எங்கே

வாதையினால் உடலும் வாடி தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாக தாங்கி வர- எங்கே

தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர- எங்கே

வல்ல பேயை கொல்லவும், மரணந் தன்னை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே

மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்கா சுமையை எடுத்து- எங்கே

No comments:

Post a Comment