Sunday, August 30, 2009

உன்னையன்றி வேறே கெதி கீர்த்தனை 326

பல்லவி

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமி!

அனுபல்லவி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! - ஆசை என் யேசு ஸ்வாமீ!- உன்னை

சரணங்கள்

பண்ணின துரோகமெல்லாம்- எண்ணினா லெத்தனை கோடி
பாதகத்துக்குண்டோ எல்லை -பர தவித்தேனே தேடி ,
கண்ணினாலுன் திருவடிக் -காண நான் தகுமோ தான்?
கடையனுக்கருள் புரி -மடியுமுன் யேசு ஸ்வாமீ! - உன்னை

அஞ்சியஞ்சித் தூர நின்றென்- சஞ்சலங்களை நான் சொல்லி ,
அலைகடல் துரும்பு போல்- மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த -வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து -க்ருபை வை யேசு ஸ்வாமீ! -உன்னை

எத்தனை கற்றாலும் தேவ -பக்தி யேது மற்ற பாவி ,
எவ்வளவு புத்தி கேட்டும் -அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் -கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப்- பிழைக்கவை யேசு சுவாமீ ! -உன்னை

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டா லாவதென்ன ?
கல்லைப் போல் கடினங் கொண்ட - கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன்-உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் -உருக வை யேசு ஸ்வாமீ -உன்னை







No comments:

Post a Comment