Monday, August 31, 2009

வீராதி வீரர் இயேசு சேனை கீர்த்தனை 229

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .

திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .

அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .

சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .

ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்

No comments:

Post a Comment