Thursday, June 25, 2009

விசுவாசியின் காதில் பட கீர்த்தனை 108

பல்லவி

விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்

விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் .

சரணங்கள்

பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவதுவே ;

முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த பெயரே .- விசு

துயரையது நீக்கிக் காயமாற்றி குணப்படுத்தும் ;

பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும் -விசு

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும் ,

மாயை கொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் .-விசு

எல்லை இல்லாக் கிருபைத் திரள் ஏற்று நிறைந்திருக்கும் ,

எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே .- விசு

என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே ,முடிவே ,

என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும், தேவே .-விசு

No comments:

Post a Comment