Thursday, June 25, 2009

ஒரு மருந்தரும் குரு மருந்-து கீர்த்தனை 106

பல்லவி

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே .

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து ,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து ,
வரும் வினைகள் மாற்றும் மருந்து
வறுமையுளோர்க்கே வாய்த்த மருந்து -குரு

சரணங்கள்

சிங்கார வனத்தில் செழித்த மருந்து ,
ஜீவ தரு மீதில் படர்ந்த மருந்து ,
அங்கு விளை பவம் மாற்றும் மருந்து ,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து -குரு

மோசே முதல் முன்னோர் காணா மருந்து ,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து ,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து -குரு

தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து ,
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து ,
மனுவை உலகினில் வந்த மருந்து - குரு

செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து ,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து ,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து -குரு

No comments:

Post a Comment