Sunday, June 21, 2009

காலையில் தேவனைத் தேடு கீர்த்தனை 276

பல்லவி

காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு .

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,

சீரான நித்திய ஜீவனை நாடு .- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே ,-மனு

மைந்தனென நாமம் வைத்திருந்தாரே ;

உன் சிருட்டிகரை நீ உதயத்தில்லெண்ணு

உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு .- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு ;-கெட்ட

பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ;

ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்

சிந்தனை செய் ;மனுவேலனைப் பணிய .-காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை

செய்யா திருங்களென்றார் மனதார ;

பரலோக செல்வ மவர்க்கு பலிக்கும் ;

பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் -காலையில்

வேலையுனக்குக் கைகூட -சத்ய

வேதன் கிருபை வரத்தை மன்றாட ,

காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே ,

கண் விழித்து ஜெபஞ் செயும்மென்றரே

No comments:

Post a Comment