Tuesday, June 23, 2009

இம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306

பல்லவி


இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த


எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.



அனுபல்லவி


நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து


நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்



சரணங்கள்

காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,

கனாவைப் போலேயும் ஒழியும்;

வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,

மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;

கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்

கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;

பரம பாதையைத் தொடர்ந்தோம் ;

வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;

வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;

கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்

சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்

சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு

தந்து, நொறுங்கினதைக் கட்டிக்

கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக

கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று

தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ

மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்

No comments:

Post a Comment