Thursday, June 18, 2009

அடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168

பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன்
அடைக்கலம் அடைக்கலமே !

அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை

சரணங்கள்
ஆசையோடு பாவமத்தில் அலைந்து திரிந்தேனே ,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே ;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்ந்தருள் !-அடை

கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன் ;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே ,
கிட்டி வந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!- அடை

சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும் ;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!-அடை

என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தாயல்லவோ

No comments:

Post a Comment