Saturday, June 27, 2009

ஐயையா நான் வந்தேன் , தேவ - கீர்த்தனை 156

பல்லவி

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா


உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா


எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

No comments:

Post a Comment