Thursday, June 11, 2009

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !

பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !

மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே

No comments:

Post a Comment