Saturday, June 6, 2009

சுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி
சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந்

சரணங்கள்

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே ,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் ;-பவத் துயர்
போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே ,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட ,-வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் -சுந்

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங் கிருபை தங்கி வாழவே ,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே ,
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும் ,
உயர்ந்து -வாழ, தீயோன்
பயந்து -தாழ, மிக
நயந்து க்ரிஸ்துவுக்கு ஜெயந்தான் , நயந்தான் என்றும்

No comments:

Post a Comment