Saturday, November 14, 2009

சேனைகளின் கர்த்தரே கீர்த்தனை 238

பல்லவி

சேனைகளின் கர்த்தரே ! நின்
திருவிலம் அளவற இனிதினிதே!

அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத .-

சரணங்கள்

திருவருளிலமே , கணுறும் உணரும்
தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய .- சேனை

புவியோர் பதிவான் புகநிதியே !
புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் !

பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவேனே; எனச்சொலி
பேனிடத்துணை ஈவையே !
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர் தரும் .- சேனை

ஆலய மது நிறைவாக ,
அவைக் குறை வொழிநதேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ,
ஆலய பர னேச
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது?

No comments:

Post a Comment