Friday, November 6, 2009

தேவா இரக்கம் இல்லையோ ? கீர்த்தனை 148

பல்லவி

தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு

தேவா இரக்கம் இல்லையோ ?

அனுபல்லவி

ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின்

மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ,ஒரே .- தேவா

சரணங்கள்

எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்

இல்லாமை நீக்கும் அருளே ,-கொடும்

பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்

கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா!-தேவா

எங்கும் நிறைந்த ஜோதியே ,-ஏழைப்

பங்கில் உறைந்த நீதியே ,-எங்கள்

சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ் க்ரீடாதிபதி !- தேவா

வேதாந்த வேத முடிவே ,-ஜெக

ஆதாரம் ஆன வடிவே ,-ஐயா,

தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே ; யேசு

நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை

No comments:

Post a Comment