Friday, November 6, 2009

வையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68

பல்லவி

வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க .

அனுபல்லவி

பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,
போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க - வைய

சரணங்கள்

வான்கள் மடமடபோ டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,
பானுவும் மதி அனைத்து மங்கிடவே
பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய

முக்கிய தூதநெக்காளமே தொனிக்க
முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க
ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க - வைய

யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு -வைய

அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;
படைத்திடுவாயிந்தக் கனமுனை .ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம் -வைய

No comments:

Post a Comment