Friday, November 6, 2009

சகோதரர்கள் ளொருமித்து கீர்த்தனை 223

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .

No comments:

Post a Comment