Wednesday, April 22, 2009

ஆதாரம் நீர் தான் ஐயா கீர்த்தனை 180

பல்லவி
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.

அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு -

நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு -

கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே -

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -

No comments:

Post a Comment