Tuesday, April 21, 2009

நம்பி வந்தேன் மேசியா கீர்த்தனை 167

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே ,-திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே .



சரணங்கள்

தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே;- வரு

தவீது குமார குரு பரமனுவேலே , நம்பி வந்தேனே ,-



நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் ;- நித

நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே .-



நாதனே கிருபை கூர் ; வேதனே , சிறுமை தீர் ,- அதி

நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.-



பாவியில் பாவியே , கோவியில் கோவியே கண

பரிவுடன் அருள் புரி அகல விடாதே; நம்பி வந்தேனே,-



ஆதி ஓலோலமே பாதுகா காலமே; உன

தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே

No comments:

Post a Comment