Monday, April 6, 2009

எங்கே சுமந்து போகிறீர்

பலலவி
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானவில் உம்து
அங்கம் முழுதும் நோக , ஐயா, என் ஏசு நாதா .-

பாரம் அழுத்த் தூக்க பெலம் இல்லம்மால் ,
நாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாத சீமோனும் பின்னாக தாங்கி வர

தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர -

வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லா பாவங்கள் எல்லாம் நாசமா கவும் -

மாசணுகாத சத்திய் வாசகனே ,உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

No comments:

Post a Comment