Thursday, April 16, 2009

குணப்படு, பாவி தேவ கோபம் கீர்த்தனை 127

பல்லவி
குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி -இப்போ

அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ -

சரணங்கள்
கர்த்தனை நீ மறந்தாய்,- அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய்,- பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்தி கெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்.-

துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ ?
மிக்கப் புலம்பாயோ? மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவ கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கத் தொடரயோ ?

தாவீ தரசனைப் போல் ,- தன்னை
தாழ்த்தும் ம்னாசேயைப் போல்
பாவி மனுஷியைப் போல்,-மனம்
பதைத்த பேதுரு போல்,
தேவனுகேற் காத தீமை செய்தேனென்று
கூவிப் புலம்பு நாள் ஆவியின் சொற்படி

உன்னை நீ நம்பாதே ,-இவ
வுலகை நம்பாதே !
பொன்னை நீ நம்பாதே ! -எப்
பொருளையும் நம்பாதே !
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அன்னவரைப் பற்று .-




No comments:

Post a Comment