Thursday, April 23, 2009

வேத புத்தகமே வேத புத்தகமே கீர்த்தனை 212

பல்லவி
வேத புத்தகமே ,வேத புத்தகமே ,
வேத புத்தகமே ,விலை பெற்ற செல்வம் நீயே .

சரணங்கள்
பேதைகளின் ஞானமே ,-பெரிய திரவியமே ,
பாதைக்கு நல தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே !

என்னை எனக்குக் காட்டி -என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே;

துன்ப காலம் ஆறுதல் -உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்- என்றும் நம்பின பேர்க்கே ,-

பன்னிரு மாதங்களும் - பரித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார் ,-

No comments:

Post a Comment